உன்னையல்லால்

நவராத்திரி  இரண்டாம் நாள் பாடல்

ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி
பாடல்: அம்புஜம் கிருஷ்ணா
உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்)

என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா
இனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்கி
ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்)

நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில்
எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்)