எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக
எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.
==
எட்டு ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசையோர்கள் பொன்றஅயில் விடுவோனே
==
எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மேல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே
“எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை”
என்கிறார் இடைக்காட்டு சித்தர்.
==
எட்டுமிரண்டையும் ஒரத்து மறை எல்லாம்
உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து
என்கிறார் கடுவெளி சித்தர்.
==
எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!”
என்கிறார் திருமூலர்
==