பௌர்ணமியின் சிறப்பு

பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும். தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பை இங்கு பார்ப்போம்.

சித்ரா பௌர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்.

வைகாசி பௌர்ணமி – முருகனின் பிறந்தநாள்.

ஆனிப் பௌர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.

ஆடிப் பௌர்ணமி – திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.

ஆவணிப் பௌர்ணமி – ஓணம், ரக்ஷபந்த திருநாள்.

புரட்டாசி பௌர்ணமி – உமாமகேசுவர பூஜை உகந்த நாள்.

ஐப்பசி பௌர்ணமி – சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.

கார்த்திகைப் பௌர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.

மார்கழிப் பௌர்ணமி – சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.

தைப் பௌர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.

மாசிப் பௌர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.

பங்குனிப் பௌர்ணமி – சிவபெருமான் உமையம்மை திருமண நாள்

Leave a comment